எம்.வை.அமீர் -
Zesdo அமைப்பின் 2016 ஆம் ஆண்டுக்கான விசேட பொதுக்கூட்டம் (SGM) ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் எக்கல் ஓய சுற்றுலா விடுதியில் 2016 நடப்பு ஆண்டு தலைவர் எஸ்.எம்.ஆரிஸ் அக்பர் (மின் அத்தியட்சகர் (இ.மி.ச) தலைமையில் 13 மற்றும் 14 திகதியில் எக்கல் ஒய சுற்றுலா விடுதியில் மிக கோலகலமாக நடைபெற்றது.இடம்பெற்றது.
ZESDO (Zairians’ Education & Social Development Organization) அமைப்பானது 1999 A/L batch ஐ மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது.
குறித்த நிகழ்வில் அனைத்து அங்கத்தவர்களும் கலந்து கொண்டதுடன் சமூகத்தின் அபிவிருத்தி சம்பந்தமாக அலசி ஆராயப்பட்டது. மேலும் இரு நாட்களாக நடைபெற்ற நிகழ்வின்போது பல வகையான பொழுது போக்கு நிகழ்ச்சிகளும் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது.
அத்துடன் Zesdo அமைப்பானது 2013 ஜனவரி மாதத்தில் ஆரம்பித்து, மூன்று ஆண்டுகளைக் கடந்து நான்காவது வருடத்தில் வெற்றிகரமாக காலடியெடுத்து வைத்துள்ளது. இவ் அமைப்பானது கல்வி, சமூக ரீதியான பல்வேறு சேவைகளை பல்வேறு சமூக ரீதியான குறிக்கோள்களை மையமாக கொண்டு தூர நோக்கு சிந்தனையுடன் இயங்கிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது..
இவ் அமைப்பு சமூகத்தின் கல்வி, கலை, கலாசார அபிவிருத்தியில் முடியுமானளவில் பங்களிப்பு செய்துகொண்டு வருகின்றது. சமூகத்தின் தேவைகளை இனங்கன்டு அவற்றைச் செய்யத்துடிக்கும் செஸ்டோ அமைப்பு இறைவனின் உதவியுடன் தங்களின் மேலான கரங்களை இணைப்பதன் மூலம் எமது சமூகத்தின் வளர்ச்சிக்கு சில விதைகளை இட்டுச்செல்லலாம் என்று எண்ணுகின்றது.
இதுவரை காலமும் Zesdo அமைப்பினால் கீழ் வரும் சேவைகள் சமூகத்திற்காக எடுத்துச் செல்லப்படிருப்பதாக இங்கு சொல்லப்பட்டது.
- ஜனாஸாவினை கொண்டுசெல்வதற்கான அம்புயுலன்ஸ் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்து வெற்றிகரமாக அதனை மக்களின் பயன்பாட்டிற்காக செயற்படுத்தப்படுகின்றது.
- கமு/ஸாஹிறா தேசிய பாடசாலையில் சுமார் 80 க்கு மேற்பட்ட ஆண், பெண் இரு பாலாரும் பங்குபற்றிய இரத்ததான முகாம் வெற்றிகரமாக செய்துமுடிக்கப்பட்டது.
- சய்ந்தமருது அக்பர் மையவாடியினை அமைப்பின் அனைத்து உறுப்பினர்களின் உதவியுடன் சுத்தம் செய்யப்பட்டமை.
- அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்ட இனம் தெரியாத ஜனாஸா ஒன்றை எமது செஸ்டோ அமைப்பினர் அடக்கம் செய்தமை.
- கமு/றியாலுல் ஜண்னா பாடசாலையில் மாணவர்கள் நீர் அருந்துதல், கை சுத்தம் செய்தலுக்கான (Drinking Water and Wash Basin Scheme) அமைத்தமை.
இது போன்ற இன்னோரன்ன சேவைகளை செஸ்டோ அமைப்பு இன்னும் செய்யும் என இந்நிகழ்வில் உறுதிபூண்டது.
