இந்தியாவுடன் வெற்றி பெற்றால் நிர்வாணமாக நிற்பேன் - அப்ரிடிக்கு சவால்

கிரிக்கெட் இரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஐசிசி இருபது 20 உலகக் கிண்ணத் தொடர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இன்று முதல் சுப்பர் 10 போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதனிடையே ரசிகர்கள் தமது அணிகளுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் நடிகை ஒருவர் அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டுள்ளார்.

அதாவது கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடனும் எதிர்பார்ப்புடனும் பார்க்கும் கிரிக்கெட் போரான பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு இடையில் எதிர்வரும் 19ஆம் திகதி நடைப்பெறவுள்ள உலகக் கிண்ண இருபதுக்கு 20 போட்டியில் பாகிஸ்தான் வென்றால் பாகிஸ்தான் வீரர்கள் முன் தான் நிர்வாணமாக நிற்பதாக பாகிஸ்தான் நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் காணொளி ஒன்றை பதிவேற்றி அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதில் ஆசிய கிண்ணத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தமைக்கு தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

மேலும் , இப்போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் அணித் தலைவர் அப்ரிடி தன்னிடம் எது கேட்டாலும் அதை தான் செய்யத் தயாராக உள்ளேன் எனவும் இந்த காணொளியில் அவர் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -