எப்.முபாரக்-
திருகோணமலை பிரதேசத்தில் ஒருவரை அடித்து காயப்படுத்திய நபர் ஒருவரை இம்மாதம் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராசா இன்று திங்கட்கிழமை (14)உத்தரவிட்டார்.
திருகோணமலை, ஆனந்தபுரி, பகுதியைச் சேர்ந்த 27வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட சண்டையின் போது குறித்த சந்தேகநபர் மற்றொருவரை பொல்லால் தாக்கி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை (13) கைது செய்து இன்று (14) பொலிஸார் திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
