ஹிக்கடுவ பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு

ஹிக்கடுவ பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ஹிக்கடுவ அம்பேகம சந்தியில் இன்று மாலை இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஹிக்கடுவ கலுபே பிரதேசத்தில் வசித்து வரும் களு என்பவர் சம்பவத்தில் காயமடைந்துள்ளார். காயமடைந்த களு என்பவர் காலி கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் மரண வீடொன்றுக்கு சென்று கொண்டிருக்கையில் மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பெத்தேகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -