மகனையும் மனைவியையும் கைது செய்வார்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தலதா மாளிகையில் இன்று காலை வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாமலும் கைது செய்யப்படுவார். ஷிரந்தியும் கைது செய்யப்படுவார். அடுத்தது என்னை கைது செய்வார்கள் என முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.
பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலை சம்பவம் தொடர்பாக முக்கியமான சாட்சியங்கள் கிடைத்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த சாட்சியங்களின் அடிப்படையில், சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்துவதற்காக நாமல் ராஜபக்ச மற்றும் ஷிரந்தி ராஜபக்ச ஆகியோர் கைது செய்யப்படவிருப்பதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.
