மேல்மாகாணசபை உறுப்பினரும், ராஜாங்க அமைச்சருமான ஏ.எச்.எம் பௌசியின் மகன் நௌசர் பௌசிக்கு எதிராக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு இந்த குற்றப்பத்திரிகையை இன்று தாக்கல் செய்ததுள்ளது.
2012ஆம் ஆண்டில் வர்த்தகர் ஒருவரை ஆயுதமுனையில் அச்சுறுத்தினார் என்று குற்றச்சாட்டினை ஆதாரமாகக் கொண்டு அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
