சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவிற்கு பைபாஸ் சத்திர சிகிச்சை..!

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவிற்கு பைபாஸ் சத்திர சிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட உள்ளதாக கொழும்பு பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாளை சுகாதார அமைச்சருக்கு சிங்கப்பூர் மவுன்ட் எலிசபத் வைத்தியசாலையில் பைபாஸ் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.

சிங்கப்பூரில் கடமையாற்றி வரும் இலங்கை மருத்துவ நிபுணரினால் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.

கடந்த 19ம் திகதி அமைச்சருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டார்.

அதன் பின்னர் சிங்கப்பூரிலிருந்து தருவிக்கப்பட் விசேட விமானமொன்றின் மூலம் மவுன்ட் எலிசபத் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதேவேளை, அமைச்சர் வழமையான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள சிங்கப்பூர் சென்றுள்ளதாகவும் வேறும் பிரச்சினைகள் கிடையாது எனவும் அவரது இணைப்புச் செயலாளர் ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார்.

இவ்வாறான நிலையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சரும் பலரும் பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -