நாரஹேன்பிட்டிய – அபயராம விகாரை அரசியல் தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றமைக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்கக் கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கிருலப்பனை ஸ்ரீபூர்வராம விகாராதிபதி விமலஞான தேரரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட கொழும்பு மாவட்ட பிரதான நீதவான், ரி.வி. குணசேகர முருத்தெட்டுவே ஆனந்த தேரரை எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுத்துள்ளார்.
நாரஹேன்பிட்டிய அபயராம விகாரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.