”பொது­ப­ல ­சே­னாவில் உள்ளவர்களை கொலை செய்யத் திட்டம்”

பொது­ப­ல­சே­னாவை அழிப்­ப­தற்கும், முக்­கி­யஸ்­த­ர்­களை இல்­லாமல் செய்­வ­தற்கும் சூழ்ச்­சிகள் நடை­பெ­று­கின்­றன. வாகன விபத்­து­களை ஏற்­ப­டுத்தி எம்மில் சிலரை கொலை செய்­வற்குத் திட்டம் தீட்­டப்­பட்­டுள்­ளது.

இந்த இர­க­சியத் தக­வல்கள் எமக்கு கிடைத்­துள்­ளன என பொது­ப­ல­சேனா அமைப்பின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் கலா­நிதி டிலந்த வித­னாகே தெரி­வித்தார்.

அர­சாங்கம் ஞான­சார தேர­ருக்குப் பயப்­ப­டு­கி­றது.இதனை விடுத்து ஐ.எஸ் தீவி­ர­வா­தி­க­ளுக்கே அர­சாங்கம் பயப்­பட வேண்டும். அளுத்­கமை வன்­செ­யல்கள் ஐ.எஸ் தீவி­ர­வா­தி­களின் நட­வ­டிக்­கை­க­ளி­னாலே நடந்­தே­றின. ஞான­சார தேரர் நீதி­மன்­றினை அவ­ம­தித்­தமை குற்­றம்தான்.

அதில் பிரச்­சினை உள்­ளது என்­றாலும் அர­சாங்கம் அவ­ருக்கு மேலும் பிரச்­சி­னை­களை உரு­வாக்­கவே முயற்­சிக்­கி­றது. பாரா­ளு­மன்­றத்தில் ஞான­சா­ர­தேரர் பற்றி பேசு­கி­றார்கள். கருத்­து­வெ­ளி­யி­டு­கி­றார்கள். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க விமர்­ச­னங்­களை முன் வைக்­கி­றார்கள். அவரை இன­வா­தி­யாக சித்­த­ரிக்­கின்­றனர்.

ஞான­சா­ர­தே­ர­ருக்கு பன்­ச­லையில் நிம்­ம­தி­யாக இருந்­தி­ருக்­கலாம். ஆனால் அவர் நாட்­டுக்­கா­கவும், நாட்டு மக்­க­ளுக்­கா­க­வுமே வீதியில் இறங்­கினார். சவால்­களை எதிர்­கொண்டார். நாம் எமக்­கா­க­வல்ல நாட்டு மக்­க­ளுக்­கா­கவே வீதியில் இறங்கி போரா­டு­கிறோம்.

பாரா­ளு­மன்­றத்தில் ஐ.எஸ் 
எமது பாரா­ளு­மன்­றத்தில் ஐ.எஸ் ஆத­ர­வா­ளர்கள் இருக்­கி­றார்கள். பொது­ப­ல­சே­னாவைத் தடை­செய்­வ­தற்கு முன்பு ஐ.எஸ் அமைப்பை இலங்­கையில் தடை­செய்­யுங்கள். எமது அமைச்சரவையிலும் ஐ.எஸ் ஆதரவு அமைச்சர்கள் இருக்கிறார்கள்.

ஜே.வி.பி பொதுபலசேனாவை அடிப்படைவாதிகள் என்று கூறுகிறது. உண்மையில் நாட்டில் இரத்த ஆறு ஓடச் செய்த ஜே.வி.பியே அடிப்படைவாதிகளாவர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -