சற்று நேரத்தில் அரசை தோற்கடிப்போம் - தேங்காய் உடைத்து சாபமிடும் நிகழ்வு

ல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக மீண்டும் தேங்காய் உடைத்து சாபமிடும் நிகழ்வொன்றை அம்மடுவ கதிர்காம தேவாலயத்தில் காலை 9.00 மணிக்கு கூட்டு எதிர்க் கட்சிகள் இன்றும் ஏற்பாடு செய்துள்ளதாக மஹிந்த ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் கூட்டு எதிர்க் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளதுடன், பொது மக்களும் பெரும் எண்ணிக்கையிலானோர் பங்கெடுக்கவுள்ளதாகவும், சற்று நேரத்தில் இந்த அரசாங்கத்தை தோற்கடிப்போம் எனும் பிரார்த்தனையுடன் இந்த தேங்காய் உடைக்கும் நிகழ்வு ஆரம்பிக்கப்படவுள்ளது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இன்று பிற்பகல் 2.00 மணிக்கு கொடகவெல நகரில் பெரும் பொதுக் கூட்டமொன்றைக் கூட்டி ருவன்புர மக்களின் எதிர்ப்பை அரசாங்கத்துக்கு வெளிப்படுத்தவுள்ளதாகவும் சொய்சா மேலும் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -