நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக மீண்டும் தேங்காய் உடைத்து சாபமிடும் நிகழ்வொன்றை அம்மடுவ கதிர்காம தேவாலயத்தில் காலை 9.00 மணிக்கு கூட்டு எதிர்க் கட்சிகள் இன்றும் ஏற்பாடு செய்துள்ளதாக மஹிந்த ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் கூட்டு எதிர்க் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளதுடன், பொது மக்களும் பெரும் எண்ணிக்கையிலானோர் பங்கெடுக்கவுள்ளதாகவும், சற்று நேரத்தில் இந்த அரசாங்கத்தை தோற்கடிப்போம் எனும் பிரார்த்தனையுடன் இந்த தேங்காய் உடைக்கும் நிகழ்வு ஆரம்பிக்கப்படவுள்ளது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இன்று பிற்பகல் 2.00 மணிக்கு கொடகவெல நகரில் பெரும் பொதுக் கூட்டமொன்றைக் கூட்டி ருவன்புர மக்களின் எதிர்ப்பை அரசாங்கத்துக்கு வெளிப்படுத்தவுள்ளதாகவும் சொய்சா மேலும் கூறியுள்ளார்.