மரண தண்டனை விதிக்கப்பட்ட வெலே சுதா சிறையில் இருந்து போதைப் பொருள் விற்பனை செய்கிறார்...!

போதைப் பொருள் விற்பனை தொடர்பான வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெலே சுதா என்ற சமந்த குமார சிறையில் இருந்தவாறு தொடர்ந்தும் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் இருக்கும் அவர் தொலைபேசி மூலமாக ஹெரோயின் வியாபாரிகளுடன் கொடுக்கல், வாங்கலில் ஈடுபட்டு வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர், கொழும்பு பிரதான நீதவான் கியான் பிலப்பிட்டியவுக்கு அறிவித்துள்ளனர்.

இது சம்பந்தமாக களுத்துறை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுரங்க சம்பத் என்பவரிடம் வாக்குமூலம் பெறவும் புலனாய்வு பிரிவினர் அனுமதி கோரியுள்ள நிலையில் அதற்கு நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -