சரத் பொன்சேக்காவுக்கு 3 மாகாணங்களுக்கான அமைச்சு..!

தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு மத்திய, வட மத்திய மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களின் அபிவிருத்தி அமைச்சு வழங்கப்படவுள்ளது.

இதற்கான அமைச்சராக எதிர்வரும் வியாழன் அல்லது சனிக்கிழமை அவர் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த அமைச்சின் கீழ் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவினால் உருவாக்கப்பட்ட மஹாவலி அபிவிருத்தி அதிகார சபையும் உள்வாங்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதம் ரணில் விக்கிரமசிங்கவும் இந்த அமைச்சுப் பதவி தொடர்பில் நீண்ட கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளதாகவும் அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். DC
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -