புதிதாக ஆரம்பமாகியுள்ள பேரினவாத சிங்கலே அமைப்பு நேற்று (23)காலை சுதந்திர சதுக்கத்தில் இருந்து கண்டி நகரை நோக்கி பயனத்தை ஆரபித்தனர்.
இந்த வாகனப்பேரணி 2.30 மணி அளவில் மாவனல்லை நகரை வந்தடைந்ததுடன். மாவனல்லை நகர மத்தியில் சிறிய கூட்டம் ஒன்றையும் நடத்தினர்.
இதன் போது மாவனல்லை பொலிசார் ஏற்பாட்டாளர்களிடம் பாதையில் பட்டாசுகள் கொளுத்த வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவறு நடந்துகொள்ளும்படியும் கேட்டுக்கொண்டனர்.
எனினும் பொலிசாரின் வேண்டுகோளை புறகணித்து பட்டாசுகளை கொளுத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதால் பொலிசாருக்கும் பேரினவாத சிங்கலே அமைப்பினருக்கும் இடையில் பதற்ற நிலை தோன்றியது.
