அல்லாஹ்வுக்கு விருப்பமான சஜ்தாவுடைய நிலையில் தன் உயிர் கைப்பற்றப்படுவது - அல்லாஹ் ஒரு மனிதனுக்கு கொடுக்கும் அளப்பெரிய பாக்கியமே- ஏனெனில் எந்த நிலையில் மரணிக்கின்றோமோ அதே நிலையிலேயே இன்ஷா அல்லாஹ் மறுமையில் எழுப்பப்படுவோம்..
யா அல்லாஹ் எங்களது உயிரையும் நீ மிகவும் விரும்பக்கூடிய நிலையில் கைப்பற்றி விடுவாயாக.
தொழுகையில் மரணத்தை நினைவு கூறுதல்.
(உனது தொழுகையில் மரணத்தை நினைவு கூறுவீராக! ஏனெனில் ஒரு மனிதன் தொழுகையில் மரணத்தை நினைவு கூறுவதால் அவனது தொழுகையை அழகாக தொழுவதற்கு வாய்ப்புக்கிட்டும். மேலும் இதன் பின்னரும் தொழுகை கிடைத்திடாது என எண்ணித் தொழும் மனிதனின் தொழுகை போன்று தொழுவாயாக! என ஹதீஸ்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய பிரிவு -இம்போட் மிரர் செய்தி கலையகம்
