அக்கரைப்பற்று வலய கல்வி அலுவலக நிர்வாகத்திற்குட்பட்ட பாலமுனை அல்-ஹிதாயா வித்தியாலயமானது கிழக்கு மாகண கல்வி திணைக்களத்தால் உயர்தர பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.
கிழக்கு மாகண கல்வித்திணைக்கள கட்டமைப்புக்குழுவின் சிபாரிசிற்கமைய உயர்தர கலைப்பிரிவை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் பாடசாலை கட்டமைப்பு வகை 1C க்கு வகைப்படுத்தப்பட்டுள்ளது..
பாலமுனை அல்-ஹிதாயா வித்தியாலயத்தை உயர்தர பாடசாலையாக தரமுயர்த்தித் தந்த கிழக்கு மாகண கல்வித் திணைக்கள அதிகாரிகள்,அக்கரைப்பற்று கல்விப் பணிமனை அதிகாரிகள் குழாமுக்கும், சம்மந்தப்பட்ட அனைவருக்கும் பாடசாலை சமூகம் தம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.
