மின்சார மீற்றரில் திருட்டு வேலையை மேற்கொண்டவர் விளக்கமறியலில்..!

எப்.முபாரக்-
னுமதிப்பத்திரமின்றி மின்சார மீற்றரில் திருட்டு வேலையை மேற்கொண்ட நபர் ஒருவரை இம்மாதம் 14ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற தீதிவான் ஹயான் மீ ஹககே திங்கட்கிழமை (11)உத்தரவிட்டுள்ளார். 

திருகோணமலை பாலையூற்று பகுதியைச் சேர்ந்த வாப்புத்தம்பி நஸிர் வயது(40)என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையூற்றுப் பகுதியில் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த மின்சார மீற்றரில் தெரியாத வகையில் சூட்சகமான முறையில் சிறிய வகை கம்பியை பதித்து மின்சார மீற்றர் சுழழாத வகையில் வைத்திருந்த ஒருவரை திருகோணமலை மின்சார ஊழியர்களும், உப்புவெளி பொலிஸாரும் மேற்கொண்ட திடிர் சோதனை நடவடிக்கையின் போது குறித்த சந்தேக நபரை ஞாயிற்றுக்கிழமை (10) இரவு கைது செய்து உப்புவெளி பொலிஸார் சந்தேக நபரை திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். 

இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -