அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேராளர் மாநாடு சற்று முன்னர் குருநாகல் ஹோட்டல் தியதாராவில் ஆரம்பமாகியுள்ளது.
கட்சியின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான MSS அமீர் அலி தலைமையில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இம்மாநாட்டில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கின்றார்.
நாட்டின் நாலபக்கங்களில் இருந்து வந்த பேராளர்களும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும் இந்த மாநாட்ட்டில் பங்கேற்றுவருகின்றனர்.
மாநாடு நடைபெறும் சுற்றுப்புறங்கள் கட்சிக்கொடிகளாலும், தோரனங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
காதர் முனவ்வர்-
