ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலை சிறார்களின் விடுகை விழா - சுபையிர் பிரதம அதிதி

றியாஸ் ஆதம்-

றாவூர் ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலை சிறார்களின் விடுகை விழாவும், பரிசளிப்பு நிகழ்வும் (16.01.2016) சனிக்கிழமை ஏறாவூர் அல்-ஜிப்ரியா வித்தியாலய கேட்போர்கூடத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

ஓய்வு பெற்ற அதிபர் ஏ. ஜூனைட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னால் சுகாதார அமைச்சரும், தற்போதைய மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ் சுபையிர் பிரதம அதிதியாகவும், ஏறாவூர் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் கே. றமீஸா கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது பாலர் பாடசாலை குழுவினரால் ஒழுங்கு செய்யப்பட்ட சிறார்களின்  கலை நிகழ்ச்சிகள் பல அரங்கேற்றப்பட்டதுடன் அதிதிகளினால் பாலர் பாடசாலை சிறார்களுக்கு நினைவுச் சின்னங்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிரினால் பாலர் பாடசாலைக்கு மடி கணணி ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -