மஹிந்தவையும் மைத்திரியையும் இணைக்க தீவிர முயற்சி...!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை இணைக்கும் முயற்சியில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட அங்கத்தவர்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பலமுள்ள கூட்டமைப்பாக தயார்படுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, பாராளுமன்றத்தில் தனியாக இயங்கிவரும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெற்ற பொது தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை பாடமாக கொண்டு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குறித்த தரப்பினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -