நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் வை.எல். சுலைமாலெவ்வையின் முயற்சியின் கீழ் நிந்தவூர் -11 இமாம் ஹஸ்ஸாலி முதலாம் குறுக்குத் தெரு வீதிக்கான மிக நீண்டநாள் குறையாகவிருந்த இவ்வீதிக்கான மின்சாரத் தேவையும், தெருவிளக்குகளும் இன்றைய தினம் (03) நிறைவேற்றி வைக்கப்பட்டது.
அந்தவகையில் இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக நிந்தவூர் பிரதேச சபையின் செயலாளர் எம்.ஜௌபர், பிரதேச சபையின் பிரதான முகாமைத்துவப்பணிப்பாளர் யூ.எல்.எம்.இஸ்மாயில், பிரதி அதிபர்களான எம்.ஐ.இஸ்ஹாக், எம்.அச்சிமுஹம்மட் உள்ளிட்ட அதிதிகளால் இவைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இதேவேளை மின்னினைப்பு வழங்கப்பட்ட குறித்த பிரதேசமானது கடந்த சுனாமியின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக தற்காலிக கொட்டில்கள் அமைத்து அவர்கள் தங்கியிருப்பதற்கு விஷேட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

