ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்-
இம்முறை 2015 கல்விப் பொதுத்தராதர உயர்தராதர பரீட்சையில் முதன் முறையாக தொழில் நுட்பவியல் பரீட்ச்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொறியியல் தொழில் நுட்பத்தில் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ள ஓட்டமாவடி மத்திய கல்லூரியை சேர்ந்த மாணவன் எம்.ஐ.எம்.மும்தஸீர் வரலாற்றில் தனது பெயரினை பதித்தமையானது முழு ஓட்டமாவடி மக்களுக்கு பெருமை சேர்க்கும் விடயமாக உள்ளது.
அதற்கும் உரு படி மேலாக மாணவன் கற்ற பாடசாலையான ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் அதிபர், மற்றும் விஞ்ஞான கணித துறைக்கு பொறுப்பான ஆசிரியர் எம்.எம்.நவாஸ் மற்றும் பெற்றார் பாதுகாவலர் சங்கம் பொன்றோர் பாராட்டபட வேண்டியவர்கள் என்பதனை இங்கு ஞாபகபடுத்திக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.
