கொலை செய்வதற்கு முயற்சித்து வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காதவர் விளக்கமறியலில்..!

எப்.முபாரக்-
டந்த 1997ஆம் ஆண்டு காலப்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி கட்டுத்துவக்கொன்றினால் ஒருவரை சுட்டுக் கொலை செய்வதற்கு முயற்சித்து காயமேற்படுத்திய குற்றச்சாட்டு சந்தேக நபர் பல வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காத குறித்த சந்தேக நபரை அடுத்தமாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சசிமகேந்திரன் புதன்கிழமை (27)உத்தரவிட்டார். 

தற்போது வாகரை மத்தி,வாகரை பகுதியைச் சேர்ந்த ரத்தினசிங்கம் மைக்கல் நீல் வயது(46)என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பப்பட்டுள்ளார். 

1997ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த சந்தேக நபர் சேருநுவர பிரதேசத்தில் வாழ்ந்து வந்த நிலையில் ஜெயராஜ் என்பவரை அனுமதிப்பத்திரமின்றி கட்டுத்துவக்கினால் கொலை செய்வதற்கு முயற்சித்து காயம் ஏற்படுத்திய குறித்த சந்தேக நபர் பல வழக்குத்தவணைகளுக்கு சமூகமளிக்காது இருந்த நிலையிலே குறித்த சந்தேக நபரை சேருநுவர பொலிஸார் புதன்கிழமை (27) கைது செய்து அன்றைய தினமே திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -