சிவனொளி பாதமலைக்கு யாத்திரையாக செல்ல வந்த 6 இளைஞர்கள் கைது..!

க.கிஷாந்தன்-

னுராதபுரம் நொச்சியாகம பகுதியிலிருந்து சிவனொளிபாதமலைக்கு யாத்திரையாக செல்ல வந்த 6 இளைஞர்கள் அட்டன் சிவில் பொலிஸாரால் 04.01.2016 அன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் புகையிரதத்தின் ஊடாக அட்டன் புகையிரத நிலையத்தில் வந்து இறங்கியுள்ளனர்.

அட்டன் புகையிரத நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டிருந்த சிவில் பொலிஸார்கள் இவர்களை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்யும் பொழுது இவர்களிடமிருந்து கஞ்சா கலந்த பாபுல் போதை பொருள் அடங்கிய 7 பக்கட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. சம்மந்தப்பட்ட சந்தேக நபர்கள் 04.01.2016 அன்று அட்டன் நீதிமன்றத்தில் நீதவான் பிரசாத் லியனகே முன்னிலையில் ஆஜர்ப்படுத்தபட்டனர்.

விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் சந்தேக நபர்கள் குற்றத்தை ஒப்பபுக்கொண்டதன் காரணமாக ஒருவருக்கு தலா 2500 ரூபா தண்டப்பணமாக விதித்ததோடு அவர்களை எச்சரித்து விடுதலை செய்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -