பிரான்ஸ் செய்தி பாரீஸ் தாக்குதலில் மக்களின் உயிரை காப்பாற்றிய நபருக்கு குடியுரிமை: 30,000 நபர்கள் வாக்களிப்பு

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது பல நபர்களின் உயிரை காப்பாற்றிய அல்ஜீரியா நாட்டை சேர்ந்த நபருக்கு பிரான்ஸ் குடியுரிமை வழங்க வேண்டும் என 30,000 பேர் வாக்களித்துள்ளனர்.

பாரீஸ் நகரில் கடந்த நவம்பர் 13ம் திகதி ஐ.எஸ் தீவிரவாதிகள் பாடக்லான் இசை நிகழ்ச்சியில் பயங்கர தாக்குதலை நடத்தினர்.

இசை அரங்கத்திற்குள் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, அந்த அரங்கத்திற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அந்த 35 வயதான நபர் உடனடியாக உள்ளே புகுந்துள்ளார்.

பின்னர், தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு அலறி ஓடிய பார்வையாளர்களை நோக்கி உரக்க கத்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உடனடியாக அங்குள்ள அவசரகால வழியை திறந்த எண்ணற்ற நபர்களை வெளியேற உதவினார்.

பிரான்ஸ் குடிமக்களின் உயிரை காப்பாற்ற தனது உயிரையும் பொருட்படுத்தாமல் செயல்பட்ட பெயர் வெளியிடப்படாத அந்த நபருக்கு பாராட்டுக்கள் குவிந்தன.

நபரின் செயலை பாராட்டி அவருக்கு பிரான்ஸ் குடியுரிமை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்ததை தொடர்ந்து, ஓன்லைன் வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த வாக்குப்பதிவில் நபருக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என இதுவரை 30,000 பேர் வாக்களித்துள்ளனர். இது குறித்து பேசிய வாக்காளர் ஒருவர், ‘தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது அந்த சத்தம் கேட்டு இவரும் வெளியே தப்பி ஓடியிருக்கலாம்.

ஆனால், ஒரு உண்மையான ஹீரோவாக செயல்பட்டு பல நபர்களை காப்பாற்றியுள்ளார். நபருக்கு நாம் அனைவரும் நன்றி செலுத்த வேண்டும் என்றால், அதனை அவருக்கு குடியுரிமை வழங்கி தான் செலுத்த வேண்டும்’ என அவர் உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.

பாரீஸ் நகரில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 130 பேர் பலியானர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -