தாஜூடீன் கொலையாளி கைது செய்யப்படுவதை தடுக்கும் அரசின் முக்கிய நபர்..?

பிரபல ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்படவிருந்த போதிலும், அரசாங்கத்தின் முக்கிய நபரின் அழுத்தம் காரணமாக அவர் கைது செய்யப்படுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பு நடத்தும் நேரத்தில் கைது செய்ய வேண்டாம் எனக் கூறியுள்ள அந்த முக்கிய நபர், கடந்த 19 ஆம் திகதிக்கு பின்னர் சந்தேக நபரை கட்டாயம் கைது செய்வதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவருக்கு வழங்கிய வாக்குறுதியை மீறியுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

வசீம் தாஜூடீன் கொலையுடன் சம்பந்தப்பட்ட கப்டன் திஸ்ஸ என்ற நபர் மகிந்த ராஜபக்சவின் சாரதி என கூறப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -