மோடி இரகசியமாக பாகிஸ்தான் பயனம்...!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஊடகங்கள் எதற்கும் அறிவிக்காமல் பாகிஸ்தான் லாஹுர் நகருக்கு இன்று திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபுர்வ விஜயத்தை முடித்துக் கொண்ட பின்னர் இந்தியா வரும் வழியில் பாகிஸ்தான் சென்றுள்ளார்.

ரஷ்யாவின் தலைநகரிலிருந்து ஆப்கானிஸ்தான் தலைநகருக்கும் விஜயம் செய்துள்ள பிரதமர் மோடி, அந்நாட்டிலுள்ள பாராளுமன்ற கட்டிடத் தொகுதியொன்றையும் திறந்து வைத்துள்ளார்.

ஆப்கானிலிருந்து இந்தியா வருவதாக ஏற்கனவே அறிவித்திருந்தும், திடீரென ஆப்கானிலிருந்து பாகிஸ்தான் சென்றுள்ளார். அங்கு பிரதமர் நவாஸ் ஷெரீபையும் சந்தித்துள்ளார். நாவஸ் ஷெரீபின் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்கவே இந்தியப் பிரதமர் அங்கு சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்திய தலைவர் ஒருவர் 11 வருடங்களின் பின்னர் பாகிஸ்தான் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மீண்டும் அவர் டெல்லி நோக்கி புரப்பட்டார்.. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -