மலேசிய சமஷ்டி எல்லைகள் அமைச்சருடன் அமைச்சர் ஹக்கீம் பேச்சுவார்த்தை...!

ஜெம்சாத் இக்பால்-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், மலேசியாவில் அண்மையில் நடைபெற்ற ஐக்கிய மலாய் தேசிய அமைப்பின் (உம்னோ) வருடாந்த மாநாட்டில் விசேட அதிதியாக பங்குபற்றினார். மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். 

இந்த விஜயத்தின் போது அமைச்சர் ஹக்கீம் உம்னோ அமைப்பின் செயலாளர் நாயகம் மலேசிய சமஷ்டி எல்லைகள் அமைச்சருமான அத்னான் மன்சூரை அவ்வமைப்பின் தலைமையகத்தில் சந்தித்து முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகம் மற்றும் இரு தரப்பு உறவுகள் தொடர்பிலும் கலந்துரையாடினார். 

ஐக்கிய மலாய் தேசிய அமைப்புக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்குமிடையில் நீண்ட காலமாக நிலவிவரும் நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது பற்றியும் அவர்கள் கலந்தாலோசித்தனர். அத்துடன் நல்லாட்சி, அபிவிருத்தி என்பன தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையில் பரஸ்பரம் தூதுக்குழுக்களை அனுப்புவதாகவும் தீர்மானிக்கப்பட்டது. 

அமைச்சர் ஹக்கீம், செனட்டரும் மலேசியாவின் மலாக்கா மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான அலி ருஸ்தம்மையும் சந்தித்தார். 

பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.எச்.எம்.சல்மான், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் அன்வர் உலூமுதீன் ஆகியோரும் அமைச்சருடன் அங்கு சென்றிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -