நிந்தவூர் “செரிட்டி பவுண்டேசன்” அமைப்பினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு..!

முஹம்மட் ஜெலீல்-
வெளிநாடுகளில் வாழும் கருணை உள்ளம் கொண்ட சகோதரர்கள் மற்றும் நிந்தவூர் “செரிட்டி பவுண்டேசன்” அமைப்பினர்களும் வழங்கிய உதவிகளைக் கொண்டு எமது நிந்தவூர் “செரிட்டி பவுண்டேசன்” அமைப்பின் ஆதரவோடு இறக்காமத்தில் உள்ள சது / இலுக்குச்சேனை அ .மு. க. பாடசாலையில் கல்விபயிலும் மிகவும் வறிய மாணவ மாணவிகளுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் இன்று 03-12-2015, வியாழக்கிழமை “செரிட்டி பவுண்டேசன்” அமைப்பின் உருபினர்களால் வழங்கிவைக்கப்பட்டது.

இந்தநிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில் “செரிட்டி பவுண்டேசன்” அமைப்பின் செயலாளர் “ஷாபி மேஷா. அவர்கள் உரையாற்றுகையில் எமது “செரிட்டி பவுண்டேசன்” அமைப்பானது பல ஆண்டுகளாக இயங்கி வருகின்றது இதில் குறிப்பாக எமது அமைப்பானது ஏழை எழிய குடும்பங்கள் மற்றும் வறுமையினால் கல்வியை தொடர முடியாத வறிய மாணவர்களை இனங் கண்டு அக்குடும்பங்களுக்கும் மாணவர்களின் கல்வியை மேன்படுத்துவதற்கும் எம்மால் முடிந்தவரை உதவிகளை மேற்கொள்வதே எமது நோக்கமென கூறினார்.

மேலும் சென்ற சில மாதங்களுக்கு முன் இதே “செரிட்டி பவுண்டேசன்” அமைப்பினரின் உதவியால் வறிய மாணவ மாணவிகளுக்கு புத்தகப் பை மற்றும் அவர்கள் கல்வி பயில்வதற்கான பாடசாலை உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -