க.கிஷாந்தன்-
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ லட்சுமி தோட்டம் மேல்பிரில் 03.12.2015 அன்று தீ பரவல் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் 03.12.2015 அன்று இரவு 09.30 மணி அளவில் இடம்பெற்றதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த குடியிருப்பில் விளக்கு ஒன்று திடீரென பற்றி எறிந்தமையினால் இந்த அனர்த்தம் இடம்பெற்றதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த தீ விபத்தினால் குடியிருப்பில் இருந்த தொலைகாட்சி, உடைகள், முக்கிய ஆவணங்கள், கற்றல் உபகரணங்கள் என்பன முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




