சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இதுவரை 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் 107 பேர் வரை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியா தலைநகரும் முக்கிய வணிக நகருமான ரியாத்தில், ஜிசான் என்ற பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அந்நாட்டு நேரப்படி அதிகாலை 2.30 மணியளவில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் குழந்தைகள் உள்ளிட்ட பலர் இறந்துள்ளதாக சவூதி அரேபிய இராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தானது மருத்துவமனையில் முதல் மாடியில் ஏற்பட்டுள்ளது.
அந்த மாடியில் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் குழந்தை நல பிரிவுகள் உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
