மாகாண சபைகளுக்கு நிதி ஒதுக்கீடு - ஜனாதிபதி தீர்மானம்

டுத்த வருடத்திற்கான மாகாண சபைகளுக்கான நிதி, நிதியமைச்சினால் ஒதுக்கீடு செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தீர்மானித்துள்ளார்.

மாகாண முதலமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதிக்கிடையே இன்று கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.

இந்த கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதன்பின்னர், எமது செய்தி பிரிவிற்கு கருத்து வெளியிட்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் அஹமட் நசீர் மாகாண சபைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை வழங்க ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டதாக குறிப்பிட்டார்.

இதனிடையே, மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் பறிக்கப்படுவதற்கு எதிராக செயற்படவுள்ளதாக கலந்துரையாடலில் பங்கேற்ற அனைத்து முதலமைச்சர்களும் தெரிவித்ததாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் அஹமட் நசீர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -