திருகோணமலை நகரில் கடையை உடைத்து திருடியவர் விளக்கமறியலில்..!

எப்.முபாரக்-
டையொன்றினை உடைத்து ஒரு இலத்சத்து இருபதாயிரம் ரூபாய் பணம்,மற்றும் அரிசி மூடைகள் போன்றவற்றைத் திருடிய ஒருவரை இம்மாதம் 8ஆம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் திங்கட்கிழமை (30)உத்தரவிட்டார். 

சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேருநுவர நகரில் அமைந்துள்ள சில்லறைக் கடையொன்றினை உடைத்து ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் பணமும், அரிசி மூடைகளும் மற்றும் இதர பொருட்களும் திருடப்பட்டதாக கடை உரிமையாளரால் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து குறித்த சந்தேக நபரை ஞாயிற்றுக்கிழமை (29)கைது செய்து சந்தேக நபரை நீதிமன்றில் சேருநுவரப் பொலிஸார் ஆஜர்படுத்திய போது விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் ஐ.எம்.றிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபருக்கெதிராக மற்றொரு திருட்டு வழக்கும் நீதிமன்றில் நடைபெற்று வருவதாகவும் சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றார்கள். இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -