முஸ்லிம் மஜ்லிஸ் மாணவர்களுடன் ரணில் - ரிசாத் விசேட சந்திப்பு..!

ஏ.எச்.எம்.பூமுதீன்-
லங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களின் முஸ்லிம் மஜ்லிஸ் பிரதிநிதிகளுக்கும் - பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்குமிடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று சனிக்கிழமை காலை பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.

அ.இ.ம.கா தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீனின் விசேட ஏற்பாட்டின் கீழ் அவரது தலைமையில் இந்த விசேட கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

பல்கலைக்கழகங்ளில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ,தேவைப்பாடுகள் மற்றும் பொதுவாக முஸ்லிம் சமுகத்தின் கல்வி நிலை தொடர்பில் விசேட திட்டங்களை வகுக்கும் அடிப்படையிலேயே இக்கலந்துரையாடலை அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஏற்பாடு செய்திருந்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்த கலந்துரையாடலில் அமைச்சர் நிரோசன் பெரேரா ,பிரதியமைச்சர் ஹர்ச டீ சில்வா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

முஸ்லிம் மஜ்லிஸ் பிரதிநிதிகள் இக்கலந்துரையாடலின் போது பிரதமரிடம் நேரடியாகவே தமது பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

மகாப்பொல புலமைப்பரிசில் நிதியினை அடுத்த வருடம் முதல் அதிகரிப்பதற்கு பிரதமர் எடுத்த நடவடிக்கைக்கு இதன் போது நன்றி தெரிவித்த முஸ்லிம் மாணவர்கள், இக்கலந்துரையாடலையும் ஏற்பாடு செய்த அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கும் தமது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -