திருகோணமலை: விபத்தில் ஒருவருக்கு பலத்த காயம்..!

எப்.முபாரக்-
திருகோணமலை அக்போபுர பகுதியில் உழவு இயந்திரம் ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) காலையில் மோதி முச்சக்கர வண்டி குடைசாய்ந்து விழந்ததில் முச்சக்கரவண்டியில் சாரதி பலத்த காயங்களுடன் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

விபத்தில் காயங்களுக்குள்ளானவர் கந்தளாய் தல்கஸ்வெவவைச் சேர்த ரத்தனவீர வயது (48) எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

வீதியில் விலகமுற்பட்ட வேளையில் முச்சக்கரவண்டியும், உழவு இயந்திரமும் மோதிதில் முச்சக்கரவண்டி குடைசாய்ந்து விழுந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

உழவு இயந்திரத்தின் சாரதியை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -