பிரி­வினையை உரு­வாக்கும் பள்­ளி­களை நபிகள் நாயகம் அழித்­ததாக குர்ஆன் தெரி­வித்­துள்­ளது - பொது­பல சேனா

து­வரை காலம் சம்­பி­ர­தாய முஸ்லிம் பிர­முகர் ஒரு­வரின் கட்­ட­டத்தில் இயங்கி வந்த அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபையின் தலை­மைக்­கா­ரி­யா­லயம் மாளி­கா­வத்தை பிர­தீபா மண்­ட­பத்­துக்கு அரு­கா­மையில் இட­மாற்­றப்­பட்­டுள்­ளது. 

இந்தக் கட்­டடம் நிர்­மா­ணிக்­கப்­ப­டு­வ­தற்கு நிதி எங்­கி­ருந்து கிடைத்­தது என பொது­பல சேனா அமைப்பு கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்­ளது.

கொழும்பு கிரு­லப்­ப­னை­யி­லுள்ள பொது­பல சேனாவின் பெளத்த மத்­திய நிலை­யத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய பொது­பல சேனா அமைப்பின் பொது செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் மேற்­கு­றிப்­பிட்­ட­வாறு கேள்­வி­யெ­ழுப்­பினார்.

மேலும் அவர் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது, உலமா சபையின் ஹலால் பிரி­வுக்­காக கொள்­ளுப்­பிட்டி அல்­பிரட் பிர­தே­சத்தில் காரி­யா­லயம் ஒன்றும் கண்­டியில் ஒரு கிளைக் காரி­யா­லயம் நிறு­வு­வ­தற்கும் அவற்றை நிர்­வ­கிப்­ப­தற்கும் நிதி எங்­கி­ருந்து பெறப்­பட்­டது என்­ப­தையும் உலமா சபை வெளிப்­ப­டுத்த வேண்டும்.

இந்­நாட்டில் இஸ்­லா­மிய தூது­வ­ரா­ல­யங்கள் ஆரம்­பிக்­கப்­பட்­டதன் பின்பே இஸ்­லா­மிய வணக்­கஸ்­த­லங்கள் அதி­க­ரித்­துள்­ளன. முஸ்லிம் கிரா­மங்­களில் ஒரே வடி­வத்தில் அமைந்­தி­ருந்த பள்­ளி­வா­சல்கள் அதி­ந­வீன தொழில்­நுட்­பங்­க­ளுடன் கூடி­ய­தாக நவீ­ன ­ம­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

கிரா­மத்தில் வெள்­ளிக்­கி­ழ­மை­களில் ஒரு ஜும்ஆ தொழு­கையே நடாத்­தப்­பட வேண்­டு­மேன இஸ்லாம் தெரி­வித்­தி­ருந்­தாலும் இன்று ஒரு கிரா­மத்தில் பல பள்­ளி­வா­சல்­களில் வெள்­ளிக்­கி­ழமை தொழுகை நடத்­தப்­ப­டு­கி­றது. இவ்­வாறு பல கொள்­கை­களை கொண்ட பள்­ளி­வா­சல்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

அண்­மையில் குரு­நா­கலில் இடம்­பெற்ற இரண்டு முஸ்லிம் பள்­ளி­வா­சல்­க­ளுக்­கி­டை­யி­லான மோதல்கள் இதற்குச் சிறந்த உதா­ர­ண­மாகும். பிரி­வினை வாதத்தை உரு­வாக்கும் பள்­ளி­வா­சல்­களை இஸ்லாம் அனு­ம­திக்­க­வில்லை.

இவ்­வா­றான பள்­ளி­வா­சல்­களை நபிகள் நாயகம் அழித்­துள்­ளார்கள் என்றே குர்ஆன் தெரி­வித்­துள்­ளது.

கிண்­ணி­யாவில் இலங்­கை­யி­லேயே பெரிய பள்­ளி­வா­ச­லொன்று நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளது. இந்தப் பள்­ளி­வா­சலின் திறப்பு விழா­விற்கு மக்­காவின் பிர­தம இமாம் ஒரு­வரே வருகைத் தந்­தி­ருந்தார்.

பள்­ளி­வா­சல்­களை நிறுவிக் கொள்ளும் முஸ்­லிம்கள் கல்வி போதிப்­ப­தற்கு பாட­சா­லைகள் எத­னையும் நிறு­வ­வில்லை. இலங்கை ஒலி­ப­ரப்பு கூட்­டுத்­தா­ப­னத்தின் முஸ்லிம் சேவை சம்­பி­ர­தாய முஸ்­லிம்­களின் நிகழ்ச்­சி­களை ஒலி­ப­ரப்­பு­வ­தற்­கா­கவே ஆரம்­பிக்­கப்­பட்­டது.

இந்தச் சேவை இன்று வஹா­பி­ஸத்­தையும் சலபிவாதத்தையும் பரப்புவதற்கு உபயோகிக்கப்படுகிறது.

அகில இலங்கை தெளஹீத் ஜமாஅத் மற்றும் அல் முஸ்லிமாத் எனும் நிகழ்ச்சி நிரல்கள் இச்சேவையில் ஒலிபரப்பப்படுகின்றன.

மத மாற்றங்களைச் செய்வதற்காக நிதா பவுண்டேசன் முஅல்லபதுல் எனும் நிகழ்ச்சி ஒன்றும் ஒலிபரப்பப்பட்டு வருகிறது என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -