யாழ்ப்பாணத்தில் இருந்து வெளி வரும் ஒரு பத்திரிகையை நடாத்துபவர்கள் அதை நடாத்துவதற்குப் பதிலாக தெருவில் நின்று பிச்சை எடுக்கலாம் என வடக்கு மாகாணசபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் வட மாகாண சபையின் 37 ஆவது அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.
வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்புத் தொடர்பில் தன்னைக் கருத்துக் கேட்ட குறித்த பத்திரிகை ஊடகவியலாளர் அதன் பின்னர் தன்னிடம் ஒரு அறிக்கையைப் பெற்றுவி்ட்டு அதனைப் பின்னர் மாற்றி செய்தி பிரசுரித்துள்ளார்.
இவ்வாறு கேவலமான வேலைகள் செய்து இவ'வூடகத்தை நடத்துவதை விடுத்து (பிழைப்பு நடாத்துவதற்கு) பதிலாக அவர்கள் தெருவில் நின்று பிச்சை எடுக்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

