க.கிஷாந்தன்-
இயற்கை அனர்த்ததால் பாதிக்கப்பட்ட மாத்தளை பிட்டகந்தை பகுதியில் 20 குடும்பங்களுக்கான பசும்பொன் வீடமைப்பு திட்டம் நிர்மாணிக்கப்பட்டு 13.11.2015 அன்று மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தினால் பசுமை பூமி எனும் காணி உறுதிப்பத்திரத்துடன் மக்களுக்கு கையளிக்கப்பட்டது.
பசும் பொன் வீடமைப்பு திட்டத்தின் மாத்தளை பிட்டகந்தை பகுதியில் 20 வீடுகளை கொண்ட தனித்தனி வீடமைப்பு தொகுதிக்கு 'ராமானுஜம் புரம் என பெயர் சூட்டி காணி உறுதிப்பத்திரத்துடன் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் 13.11.2015 அன்று கையளித்தார்.
இந்த வீடுகள் கையளிக்கும் நிகழ்வில் விவசாய ராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிகார மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ரஞ்சித் அலுவிகார, ரோஹிணி கவிரத்ன, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜா, மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் மற்றும் பெருந்தோட்ட மனிதவள பொறுப்பின் தலைவர் வி.புத்திரசிகாமணி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.




