திருகோணமலையில் திருட்டுப் பொருட்களை கொண்டு சென்ற ஒருவருக்கு ஆறு மாதம் சிறைதண்டனை..!

எப்.முபாரக்- 
டந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் திருகோணமலை பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் திருடிய பொருட்களை கொண்டு சென்ற ஒருவருக்கு புதன்கிழமை (4) மாலையில் திருகோணமலை நீதிமன்றம் ஆறு மாதம் கட்டாய சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

திருகோணமலை பாலையூற்றுப் பிரதேசத்தைப் சேர்ந்த 41 வயதுடைய ஒருவருக்கே அத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

குறித்த வழக்கின் சந்தேகநபர் திருடிய பொருட்களான டயர், டியூப், இலத்திரனியல் பொருட்கள் மற்றும் வெற்றரி சாதனங்கள் போன்றவற்றை முச்சக்கரவண்டியில் கொண்டு சென்ற போதே உப்புவெளி பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டு வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

குறித்த வழக்கு திருகோணமலை நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் குறித்த வழக்கின் சந்தேக நபரை குற்றவாளியாக இணங்கண்டு ஆறு மாதம் கட்டாய சிறை தண்டனை விதித்து திருகோணமலை நீதிமன்ற நீதிபதி டி.சரவணராஜா உத்தரவு பிறப்பித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -