மஹிந்தவுக்கான ஓய்வூதியம் நன்மையானது: சந்திரிகாவுடன் ஒப்பிடுகையில் அதிகமானது

2016ம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கான ஓய்வூதிய நன்மையானது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுடன் ஒப்பிடுகையில் அதிகமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வரவுசெலவுத்திட்டத்தில் மஹிந்தவுக்கு 4.17மில்லியன் ரூபாய்கள் ஓய்வூதிய நன்மைகள் கிடைத்துள்ளன.

எனினும் சந்திரிகாவுக்கு 3.3 மில்லியன் ரூபாய்களே ஒதுக்கப்பட்டுள்ளன.

இதனைதவிர முன்னாள் ஜனாதிபதிகளுக்கு மூலதன செலவாக தலா 5 இலட்சம் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன

முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸவின் மனைவி ஹேமாவுக்கு 275ஆயிரம் ரூபா ஓய்வூதிய நன்மையாக ஒதுக்கப்பட்டுள்ளது.

அவருக்கு மூலதன செலவாக 4 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்படி முன்னாள் ஜனாதிபதிகளின் மனைவிமாருக்கு 9.345 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க தலைவியான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்கு 25 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -