கட்சியை விட நாட்டு நலனைக் கருத்தில் கொண்டே இந்த அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது - பைஸர் முஸ்தபா

ஐ. ஏ. காதிர் கான்,மினுவாங்கொடை நிருபர்-
ட்சியை விட நாட்டின் நலனைக் கருத்திற் கொண்டே தேசிய அரசாங்கம் உருவாக்கப் பட்டது என, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா நேற்று மொறட்டுவை மா நகர சபை உறுப்பினர்களைச் சந்தித்து உரையாற்றுகையில் தெரிவித்தார். 

அமைச்சர் மேலும் இங்கு கூறியதாவது, “ஒரு கட்சியின் வெற்றி நாட்டின் முன்னேற்றத்திலேயே தங்கியுள்ளது.​ நானோ அல்லது ஜனாதிபதியோ எச் சந்தர்ப்பத்திலும் கட்சியை ஒருபோதும் மறக்கப் போவதில்லை. 

அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் நிர்வகிக்கப்படும் உள்ளூராட்சி சபைகளின் அபிவிருத்தியை நோக்கும் போது எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கின்றது. தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டின் கீழ் இயங்கும் இவ்வரசின் உள்ளே சகல உறுப்பினர்களும் கெளரவமான முறையில் பாதுகாக்கப்​பட வேண்டும். 

அதே போன்று, ஜனாதிபதியும் உள்ளூராட்சி சபைகளை மிகவும் சக்தி வாய்ந்ததாக மாற்றுவதற்கு விரும்புகிறார். எனவேதான், இந்த ஆண்டில் உள்ளூராட்சி சபைகளுக்குத் தேவையான உயர்ந்த பட்ச வளங்களைப் பெற்றுத் தர நான் எதிர்பார்க்கிறேன் என்றார்.

இத் தகவலை தங்கள் ஊடகத்தின் ஊடாக பிரசுரித்துத் தருமாறும், இது தொடர்பில் தங்களால் கிடைக்கும் மேலான ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன்.

அமில பாலசூரிய,
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரின் ஊடக செயலாளர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -