திருகோணமலை இளைஞர் நாடாளுமன்றத் தேர்தல் - 3வர் வெற்றி

எப்.முபாரக்

திருகோணமலை மாவட்டத்தில் இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் மூவர் வெற்றி பெற்றுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் திருகோணமலை மாவட்ட உதவிப்பணிப்பாளர் ஏ.ஹமீர் தெரிவித்தார்.

சேருவில தேர்தல் தொகுதியில் 290 வாக்குகளைப் பெற்று ரண திஸர இளைஞர் கழகத்தைச் சேர்ந்த டி.எம்.பிரதீப்குமாரவும் மூதூர் தேர்தல் தொகுதியில் நெய்தல் நகர் இளைஞர் கழகத்தில் போட்டியிட்ட எம்.என்.முகம்மது முஸாகிர் 259 வாக்குகளையும் பெற்றுள்ளார்.

இதேவேளை திருகோணமலை தேர்தல் தொகுதியில் 06 பேர் வேற்பாளர்களாக போட்டியிட்டதில் லிங்சிட்டி இளைஞர் கழகத்தில் போட்டியிட்ட கருணாநிதி ராஜ்கரன் 186 வாக்குகளைப்பெற்று வெற்றி பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -