டிக்கோயா போடைஸ் பகுதியில் குளவி தாக்குதல் - 15 பேர் வைத்தியசாலையில்

செய்தியாளர்- க.கிஷாந்தன்-


நுவரெலியா மாவட்டத்தில் அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா போடைஸ் தோட்டத்தில் 16.11.2015 அன்று காலை 11 மணியளவில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது குளவி தாக்கியுள்ளது.

தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருக்கும் போது கழுகு ஒன்று மரத்தில் இருந்த குளவி கூட்டை கலைத்ததினால் குளவி கூடு கலைந்து கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்களின் மீது இவ்வாறு தாக்கியுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான 15 பேரில் ஐந்து பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதுடன் ஏனைய 10 பேர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குளவி தாக்குதலுக்கு இழக்கானவர்களில் 13 பெண்களும் 2 ஆண்களும் அடங்குகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -