12வயதில் இருந்து என்னை துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உட்­ப­டுத்தினார் பொலிஸ் அதிகாரி - பொத்துவிலில் சம்பவம்

தன்னை வீட்டு வேலைக்கு அமர்த்­தி­யி­ருந்த பொலிஸ் அதி­காரி தன்னை 12 வய­தி­லி­ருந்தே துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உட்­ப­டுத்தி வந்­துள்­ள­தாக 19 வய­தான யுவதி ஒருவர் பொத்­துவில் பொலி­ஸா­ரிடம் வாக்­கு­மூலம் அளித்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

இச்­சம்­பவம் பற்றித் தெரி­ய­வ­ரு­வ­ரு­வ­தா­வது,

பொத்­துவில் – றொட்டைப் பகு­தியைச் சேர்ந்த 19 வய­தான யுவதி கடந்த புதன்­கிழமை மாலை திடீர் சுக­வீ­ன­முற்ற நிலையில் பொத்­துவில் ஆதார வைத்­திய சாலையில் அனு­ம­திக்­கப்­பட்டார்.

அந்த யுவ­தியை பரி­சோ­தித்த வைத்­தி­யர்கள் அவர் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உட்­ப­டுத்­தப்­பட்டு வந்­தி­ருப்­பதை அறிந்து கொண்டு அந்தத் தக­வலை பொத்­துவில் பொலி­ஸா­ருக்கு தெரி­யப்­ப­டுத்­தினர்.

அத­ன­டிப்­ப­டையில் பொலிஸார் யுவ­தி­யி­டமும் அவ­ரது உற­வி­னர்­க­ளி­டமும் மேற்­கொண்ட விசா­ர­ணையின் பிர­காரம் குறித்த யுவதி 12 வய­தி­லி­ருந்தே கொழும்பு – தெஹி­வ­ளை­யி­லுள்ள பிர­தான பொலிஸ் பரி­சோ­த­க­ரான ஒரு பொலிஸ் அதி­கா­ரியின் வீட்டில் வேலைக்கு அமர்த்­தப்­பட்­டி­ருந்­தி­ருப்­பதும் அங்கு தொடர்ச்­சி­யாக பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு வந்­தி­ருப்­பதும் தெரி­ய­வந்­தி­ருக்­கின்­றது.

கடை­சி­யாக குறித்த பொலிஸ் அதி­காரி தனது நண்­பர்­க­ளையும் அழைத்து வந்து இந்த யுவ­தியை துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உட்­ப­டுத்­திய வேளையில் அவர் அங்­கி­ருந்து தப்பி வந்து நோய்­வாய்ப்­பட்ட நிலையில் பொத்­துவில் வைத்­தி­ய­சா­லையில் கடந்த புதன்­கிழமை சேர்க்­கப்­பட்­டுள்ளார்.

தற்சமயம் குறித்த யுவதி பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிரு க்கின்ற நிலையில் இது குறித்த மேல­திக விசா­ர­ணையை தாம் மேற்கொண்டுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர். 
-வீரகேசரி-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -