மதுபானம் விற்பனை செய்தவர் கைது..!

க.கிஷாந்தன்-
து ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு இலங்கையில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் 03.10.2015 அன்று மூடுமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ள போதிலும் உத்தரவை மீறி வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை டெம்பள்ஸ்டோவ் தோட்டத்தில் ஒரு வீட்டு தோட்டத்தில் அப்பகுதி தோட்ட தொழிலாளிகளுக்கு இரகசியான முறையில் மதுபானத்தை விற்பனை செய்த மேற்படி சந்தேக நபர் ஒருவரை 03.10.2015 அன்று இரவு 10 மணியளவில் வட்டவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் மேற்படி தோட்டத்தினுள் மதுபானம் விற்பனை செய்வதாக வட்டவளை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் நிலையத்தின் பொலிஸார் சுற்றி வளைப்பினை மேற்கொண்டு இவ்வாறு கைது செய்துள்ளனர்.

இதன் போது விற்பனைக்காக வைத்திருந்த 65 மதுபான போத்தல்களையும் வட்டவளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்த சந்தேக நபரை வட்டவளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்த பின் பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -