நள்ளிரவு வேளையில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்..!

எம்.எம்.ஜபீர்-
நாவிதன்வெளி பிரதேசத்திலுள்ள சொறிக்கல்முனை, 6ஆம் கொளனி பிரதேசங்களில் நேற்று நள்ளிரவு வேளையில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் உடமைகளையும், தோட்டப் பயிர்களையும் சேதப்படுத்தியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

வேலிகளை உடைத்து கொண்டு தென்னை மரம், பலா மரம், வாழை மரங்கள், மரவள்ளி தோட்டங்களை சேதப்படுத்தியுள்ளது.

பகல் வேளையில் கிட்டங்கி நானல் பிரதேசத்தில் மறைந்து கொண்டு இரவு வேளைகளில் கள்ளியங்காடு வயல்வெளி ஊடாக குடியிருப்பு பகுதிகளுக்குள் உட்புகுந்து உடைமைகளை சேதப்படுத்தி வருவதாகவும், இதன் காரணமாக இரவு வேளைகளில் அச்சத்துடன் வாழ வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இப்பிரதேசத்தில் மின்சார வேலி அமைக்கப்படாததன் காரணமாகவே யானைகள் ஊருக்குள் நுளைந்து மக்களுக்கு இன்னல்களை ஏற்படுத்தி வருவதால் பிரதேச மக்கள் நாளாந்தம் கஸ்டத்தினை எதிர்நோக்கி வருகின்றனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -