ரயிலில் திடீர் தீ - பயணிகளுக்கு மூச்சுத் திணறல்.!

சென்னை பெருங்குடி அருகே பறக்கும் ரயிலில் திடீர் தீ விபத்தால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வேளச்சேரியில் இருந்து கடற்கரை மார்க்கமாக இன்று காலை 9 பெட்டிகளுடன் கூடிய மின்சார ரயில் சென்றது. பெருங்குடி அருகே சென்ற போது, ரயிலில் உள்ள 2 பெட்டிகளில் திடீரென்று தீ பற்றியது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்து அலறினர். 

பின்னர் தீயின் வேகம் அதிகமானதால் பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதில் பயணி ஒருவர் மயக்கம் அடைந்தார். இதனையடுத்து 2 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பறக்கும் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -