முச்சக்கரவண்டி விபத்து இருவர் படுங்காயம்.!

 க.கிஷாந்தன்-
ட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று பிரதான வீதியில் குடைசாயந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

இவ்விபத்து 02.10.2015 அன்று வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அட்டன் – அலுத்கம பிரதேசத்தில் இருந்து டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு சென்ற போதே இவ்வாறு தனது வேக கட்டுப்பாட்டை இழந்து அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் டிக்கோயா பகுதியில் வைத்து குடைசாயந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேற்படி முச்சக்கரவண்டியில் சாரதியும் பெண் ஒருவரும் பயணித்துள்ளனர். விபத்தில் படுங்காயமடைந்த இருவரும் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேவேளை குறித்த முச்சக்கரவண்டிக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -