பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலய ஜெகதீசன் கர்ஜிதன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாமிடம்...!


இம்முறை நடைபெற்று முடிந்த தரம்-5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளது. நாடளாவிய ரீதியில் பல பாடசாலைகளில் மாணவர்கள் பல்வேறு சாதனைகளை இப்பரீட்சைப் பெறுபேறுகளில் படைத்துள்ளனர்.
 
அவ்வகையில் கல்குடா கல்வி வலயத்திற்கு உட்பட்ட பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தைச் சேர்ந்த ஜெகதீசன் கர்ஜிதன் என்னும் மாணவன் 190 புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் 2ம் இடத்தினைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
 
இதுகுறித்து பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தின் அதிபர் க.கதிர்காமநாதன் தெரிவிக்கையில்!
 
'எமது பாடசாலையில் கடந்த வருடத்தினை விட இவ்வருடம் அதிகமான மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். அவ்வகையில் 52 மாணவர்கள் 100க்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர். அவர்களுள் ஜெ.கர்ஜிதன் என்னும் மாணவன் 190 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தினைப் பெற்று பாடசாலைக்கும், கல்குடா கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
 
அத்தோடு ஜ.யோபிக்கா-169, நி.அஜிஷேக் - 165, சி.தனுஜன்-163, ஜி.துஷ்யந்தன்-157, ர.லயனல்ராஜ்-154 என ஆறு மாணவர்கள் புலமைப் பரிசிலுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -