காயான்கேணி சரஸ்வதி வித்தியாலயத்தில் உயர்தர வகுப்புக்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு.!

ந.குகதர்சன்-
வாகரை காயான்கேணி சரஸ்வதி வித்தியாலயத்தில் கலைப்பிரிவு உயர்தர வகுப்புக்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு வித்தியாலயத்தில் நடைபெற்றது.

வித்தியாலய அதிபர் சி.காளிதாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம், கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா, பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.சுஜாத்தா குலேந்திரகுமார், வாகரை கோட்டக் கல்விப் பணிப்பானர் எஸ்.பரமேஸ்வரன், அண்மித்த பாடசாலை அதிபர்கள், கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள், எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது அதிதிகளால் உயர்தர வகுப்பறையை நாடா வெட்டி திறந்து வைத்ததுடன், மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

இப்பாடசாலையில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படும் மாணவர்களின் கல்வி நடவடிக்கை சாதாரண தரத்துடன் நிறைவு பெறும் நிலை காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனிடம் தெரிவித்து இங்கு உயர்தர வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு ஏற்பாடும் செய்து தருமாறு கோரியதற்கிணங்க மாகாணப் பணிப்பாளரின் உதவியுடன் தற்போது உயர்தர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வித்தியாலய அதிபர் சி.காளிதாசன் தெரிவித்தார்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -