ஏ.எம்.றிகாஸ்-
உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு கரடியனாறு விதை மற்றும் நடுகைப் பொருள் அத்தாட்சிப்படுத்தும் பண்ணையில் இன்று 05.10.2015 முற்பகல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீஎஸ்எம் சாள்ஸ் தலைமையில் நடைபெற்றது.
விதை நடுதல், வயல் உழுதுதல், செயற்கைப் பசளை தயாரித்தல் போன்ற செயற்பாடுகளுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் விவாயிகளுக்கான விழிப்புணர்வூட்டும் செயற்றிட்டமும் நடைபெற்றது. மேலும் பழ மரக்கன்றுகளும் இதன்போது நடப்பட்டன.
கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே.துரைராஜசிங்கம், மாவட்ட பாராளுமன்ற உறுப்ப்pனர்களான அலிஸாஹிர் மௌலானா,சீனித்தம்பி யோகேஸ்வரன், சதாசிவம் வியாழேந்திரன், ஞானமுத்து .சிறிநேசன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான என். இந்திரகுமார் மற்றும் இரா.துரைரட்ணம் உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.





